Monday, June 7, 2010

பார்வேர்ட் மெயில் - அப்படி என்னதான் வேலை பார்ப்பீங்க ?"

அப்படி என்னதான் வேலை பார்ப்பீங்க ?"

நியாயமான ஒரு கேள்வி

"ஏம்பா இந்த கம்ப்யூட்டர் படிச்சவங்க எல்லாம் நிறைய சம்பளம்
வாங்கிட்டு, பந்தா பண்ணிட்டு ஒரு தினுசாவே அலையுறீங்களே? அப்படி என்னதான் வேலை பார்ப்பீங்க ?" –

நியாயமான ஒரு கேள்வியை கேட்டார் எனது அப்பா.

நானும் விவரிக்க ஆரம்பிதேன்.

"வெள்ளைகாரனுக்கு எல்லா வேலையும் சீக்கிரமா முடியனும்.
அதே மாதிரி எல்லா வேலையும் அவனோட வீட்டுல
இருந்தே செய்யணும்.
இதுக்காக எவ்வளவு பணம் வேணுமானாலும் செலவு செய்ய
தயாரா இருக்கான்."

"அது சரி பல்லு இருக்குறவன் பக்கோடா சாப்பிடுறான்".

"இந்த மாதிரி அமெரிக்கால்-ல, இங்கிலாந்து-ல இருக்குற Bank,
இல்ல எதாவது கம்பெனி, "நான் செலவு செய்ய தயாரா இருக்கேன்.
எனக்கு இத செய்து கொடுங்க கேப்பாங்க.
இவங்கள நாங்க "Client"னு சொல்லுவோம்.

"சரி"

இந்த மாதிரி Client-அ மோப்பம் பிடிக்குறதுக்காகவே எங்க
பங்காளிக கொஞ்ச பேர அந்த அந்த ஊருல உக்கார வச்சி இருப்போம். இவங்க பேரு "Sales Consultants, Pre-Sales Consultants. ...".

இவங்க போய் Client கிட்ட பேச்சுவார்த்தை நடத்துவாங்க.

காசு கொடுகுறவன் சும்மாவா கொடுப்பான்?

ஆயிரத்தெட்டு கேள்வி கேப்பான். உங்களால இத பண்ண முடியுமா?

அத பண்ண முடியுமான்னு அவங்க கேக்குற எல்லாம் கேள்விக்கும், "முடியும்"னு பதில் சொல்றது இவங்க வேலை.

"இவங்க எல்லாம் என்னப்பா படிச்சுருபாங்க"?

"MBA, MSனு பெரிய பெரிய படிபெல்லாம் படிச்சி இருப்பாங்க."

"முடியும்னு ஒரே வார்த்தைய திரும்ப திரும்ப சொல்றதுக்கு
எதுக்கு MBA படிக்கணும்?" –

அப்பாவின் கேள்வியில் நியாயம் இருந்தது.

"சரி இவங்க போய் பேசின உடனே client project கொடுத்துடுவானா?"

"அது எப்படி? இந்த மாதிரி பங்காளிக எல்லா கம்பெனிளையும்
இருப்பாங்க. 500 நாள்ல முடிக்க வேண்டிய வேலைய 60 நாள்ள
முடிச்சு தரோம், 50 நாள்ல முடிச்சு தரோம்னு பேரம் பேசுவாங்க.
இதுல யாரு குறைஞ்ச நாள சொல்றாங்களோ அவங்களுக்கு
ப்ராஜெக்ட் கிடைக்கும்"

"500 நாள்ல முடிக்க வேண்டிய வேலைய 50
நாள்ல எப்படி முடிக்க முடியும்? ராத்திரி பகலா வேலை பார்த்தாலும்
முடிக்க முடியாதே?"

"இங்க தான் நம்ம புத்திசாலித்தனத்த நீங்க
புரிஞ்சிக்கணும். 50 நாள்னு சொன்ன உடனே client சரின்னு சொல்லிடுவான்.

ஆனா அந்த 50 நாள்ல அவனுக்கு என்ன வேணும்னு அவனுக்கும்
தெரியாது, என்ன செய்யனும்னு நமக்கும் தெரியாது.
இருந்தாலும் 50 நாள் முடிஞ்ச பிறகு ப்ரோஜெக்ட்னு ஒன்ன நாங்க deliver பண்ணுவோம்.
அத பாத்துட்டு "ஐய்யோ நாங்க கேட்டது இதுல்ல,
எங்களுக்கு இது வேணும், அது வேணும்னு" புலம்ப ஆரம்பிப்பான்.

"அப்புறம்?" - அப்பா ஆர்வமானார்.

"இப்போ தான் நாங்க நம்பியார் மாதிரி கைய பிசஞ்சிகிட்டே
"இதுக்கு நாங்க CR raise பண்ணுவோம்"னு சொல்லுவோம்.

"CR-னா?"

"Change Request. இது வரைக்கும் நீ கொடுத்த பணத்துக்கு நாங்க
வேலை பார்த்துட்டோம்.
இனிமேல் எதாவது பண்ணனும்னா எக்ஸ்ட்ரா பணம் கொடுக்கணும்"னு
சொல்லுவோம்.
இப்படியே 50 நாள் வேலைய 500 நாள் ஆக்கிடுவோம்."

அப்பாவின் முகத்தில் லேசான பயம் தெரிந்தது.

"இதுக்கு அவன் ஒத்துபானா?"

"ஒத்துகிட்டு தான் ஆகணும்.

முடி வெட்ட போய்ட்டு, பாதி வெட்டிட்டு வர முடியுமா?"

"சரி ப்ராஜெக்ட் உங்க கைல வந்த உடனே என்ன பண்ணுவீங்க?"

"முதல்ல ஒரு டீம் உருவாக்குவோம்.
இதுல ப்ராஜக்ட் மேனேஜர்னு ஒருத்தர் இருப்பாரு.
இவரது தான் பெரிய தலை.
ப்ராஜெக்ட் சக்சஸ் ஆனாலும், ஃபெயிலியர் ஆனாலும் இவரு தான் பொறுப்பு."

"அப்போ இவருக்கு நீங்க எல்லாரும் பண்ற வேலை எல்லாம்
தெரியும்னு சொல்லு."

"அதான் கிடையாது.

இவருக்கு நாங்க பண்ற எதுவும்யே தெரியாது."

"அப்போ இவருக்கு என்னதான் வேலை?" –

அப்பா குழம்பினார்.

"நாங்க என்ன தப்பு பண்ணினாலும் இவர பார்த்து கைய நீட்டுவோம். எப்போ எவன் குழி பறிப்பானு டென்ஷன் ஆகி டயர்ட் ஆகி டென்ஷன்
ஆகுறது தான் இவரு வேலை."

"பாவம்பா"

"ஆனா இவரு ரொம்ப நல்லவரு.
எங்களுக்கு எந்த பிரச்னை வந்தாலும் இவரு கிட்ட போய் சொல்லலாம்."


"எல்லா பிரச்னையும் தீர்த்து வச்சிடுவார?"

"ஒரு பிரச்சனைய கூட தீர்க்க மாட்டாரு.
நாங்க என்ன சொன்னாலும் தலையாட்டிகிட்டே உன்னோட பிரச்னை
எனக்கு புரியுதுனு சொல்றது மட்டும் தான் இவரோட வேலை."

"நான் உன்னோட அம்மா கிட்ட பண்றத மாதிரி?!"

"இவருக்கு கீழ டெக் லீட், மோடுல் லீட், டெவலப்பர், டெஸ்டர்னு
நிறைய அடி பொடிங்க இருப்பாங்க."

"இத்தனை பேரு இருந்து, எல்லாரும் ஒழுங்கா வேலை செஞ்சா
வேலை ஈஸியா முடிஞ்சிடுமே?"

"வேலை செஞ்சா தானே?
நான் கடைசியா சொன்னேன் பாருங்க...
டெவலப்பர், டெஸ்டர்னு, அவங்க மட்டும் தான் எல்லா வேலையும் செய்வாங்க. அதுலையும் இந்த டெவலப்பர்,வேலைக்கு சேரும் போதே "இந்த குடும்பத்தோட மானம், மரியாதை உன்கிட்ட தான் இருக்குனு"
சொல்லி, நெத்தில திருநீறு பூசி அனுப்பி வச்ச என்னைய மாதிரி
தமிழ் பசங்க தான் அதிகம் இருப்பாங்க."

"அந்த டெஸ்டர்னு எதோ சொன்னியே?
அவங்களுக்கு என்னப்பா வேலை?"

"இந்த டெவலப்பர் பண்ற வேலைல குறை கண்டு பிடிக்கறது
இவனோட வேலை.

புடிக்காத மருமக கை பட்டா குத்தம்,
கால் பட்டா குத்தம் இங்குறது மாதிரி."

"ஒருத்தன் பண்ற வேலைல குறை கண்டு பிடிகுறதுக்கு சம்பளமா?
புதுசா தான் இருக்கு. சரி இவங்களாவது வேலை செய்யுராங்களா.
சொன்ன தேதிக்கு வேலைய முடிச்சு கொடுத்துடுவீங்கள்ள?"

"அது எப்படி..? சொன்ன தேதிக்கு ப்ராஜக்டை முடிச்சி கொடுத்தா,
அந்தக் குற்ற உணர்ச்சி எங்க வாழ்கை முழுவதும் உறுத்திக்கிட்டு
இருக்கும். நிறைய பேரு அந்த அவமானத்துக்கு பதிலா தற்கொலை
செய்துக்கலாம்னு சொல்லுவாங்க"

"கிளையன்ட் சும்மாவா விடுவான்?

ஏன் லேட்னு கேள்வி கேக்க மாட்டான்?"

"கேக்கத்தான் செய்வான். இது வரைக்கும் டிமுக்குள்ளையே
காலை வாரி விட்டுக்கிட்டு இருந்த நாங்க எல்லாரும் சேர்ந்து அவன் காலை வார ஆரம்பிப்போம்."

"எப்படி?"

"நீ கொடுத்த கம்ப்யூட்டர்-ல ஒரே தூசியா இருந்துச்சு.
அன்னைக்கு டீம் மீட்டிங்ல வச்சி நீ இருமின,
உன்னோட ஹேர் ஸ்டைல் எனக்கு புடிகலை."
இப்படி எதாவது சொல்லி அவன குழப்புவோம்.
அவனும் சரி சனியன எடுத்து தோள்ல போட்டாச்சு,
இன்னும் கொஞ்ச நாள் தூங்கிட்டு போகட்டும்னு விட்டுருவான்".

"சரி முன்ன பின்ன ஆனாலும் முடிச்சி கொடுத்துட்டு கைய
கழுவிட்டு வந்துடுவீங்க அப்படித்தான?"

"அப்படி பண்ணினா, நம்ம நாட்டுல பாதி பேரு வேலை இல்லாம
தான் இருக்கணும்."

"அப்புறம்?"

"ப்ராஜக்டை முடிய போற சமயத்துல நாங்க எதோ பயங்கரமான
ஒன்ன பண்ணி இருக்குறமாதிரியும், அவனால அத புரிஞ்சிக்க
கூட முடியாதுங்கற மாதிரியும் நடிக்க ஆரம்பிப்போம்."

"அப்புறம்?"

"அவனே பயந்து போய்,
"எங்கள தனியா விட்டுடாதீங்க. உங்க டீம்-ல ஒரு ஒன்னு, ரெண்டு
பேர உங்க ப்ரொஜெக்ட பார்த்துக்க சொல்லுங்கன்னு"

புது பொண்ணு மாதிரி புலம்ப ஆரம்பிச்சிடுவாங்க."
இதுக்கு பேரு "Maintenance and Support".
இந்த வேலை வருஷ கணக்கா போகும்.
"ப்ராஜக்ட் அப்படிங்கறது ஒரு பொண்ண கல்யாணம் பண்ணி வீட்டுக்கு
கூட்டிட்டு வர்றது மாதிரி.

தாலி கட்டினா மட்டும் போதாது, வருஷ கணக்கா நிறைய செலவு செஞ்சு பராமரிக்க வேண்டிய விசயம்னு" இப்போ தான் கிளைன்டுக்கு
புரிய ஆரம்பிக்கும்.

"எனக்கும் எல்லாம் புரிஞ்சிடுப்பா."

Friday, May 28, 2010

பார்வேர்ட் மெயில் - குடிப்பழக்கம் உனக்கு மட்டுமல்ல அடுத்தவர்க்கும் கேடு



திடமான மனதுடன் தொடரவும்...




விட்டுகொடுக்கும் மனப்பான்மையும், நிறைய நிறைய காதலையும் சேர்த்து வைத்திருந்த அழகிய இளம்பெண் இவள்..


இவளது வாழ்கையில் இப்படி ஒரு சம்பவம் நடக்கும். நாம் பாதிக்கபடுவோம் என்று கனவிலும் நினைக்கவில்லை இவள்..

இந்த இடுகையை முடிந்த அளவு நண்பர்கள் குறிப்பாக கார் ஓட்டும் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்...




இவர் பெயர் : ஜாக்குலின் சபரிடோ செப்டம்பர் 19-1999 அன்று



தனது தந்தையுடன் 1998 ல் .







குழந்தை பருவத்தில் பிறந்தநாள் விழாவின் போது....

. தனது நண்பர்களுடன் ஒரு பார்ட்டியில்.



அவர் பயணம் செய்த கார் எதிரே வந்த கார் மோதி விபத்துக்குள்ளாகி கிடக்கிறது...
விபத்துக்கான காரணம்.. இவர் கார் மீது மோதிய காரை 17 வயது இளைஞன் குடித்துவிட்டு ஓட்டியது தான்...
நடந்தது : டிசம்பர் 1999.




விபத்து நடந்த 45தாவது நொடிகளில் ஜாக்குலின் மீட்கப்பட்டார்..ஆனாலும் அவரின் உடல் முற்றிலும் எரிந்த நிலையில் இருந்தது...விபத்திற்கு பிறகு அவருக்கு 40 அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன.....








அவர் தந்தையுடன் 2000௦ வருடத்தில்..



சிகிச்சை பெறுகிறார்...


விபத்து நடந்து மூன்று மாதங்களுக்கு பிறகு..


இடது கண் இல்லாத நிலையில் இவரின் பார்வைக்கு சொட்டு மருந்து அவசியம்...



இந்த இளைஞன் தான் குடித்துவிட்டு வண்டி ஓட்டியவர்...இவரால் இன்னும் அந்த பாதிப்பில் இருந்து மீள முடியவில்லை..தன்னால் ஒரு பெண் பாதிக்க பட்டதை நினைத்து அழுகிறார்...


விபத்து நடந்து மூன்று வருடங்களுக்கு பிறகு....
இன்றைய ஜாக்குலின் சபரிடோ .


எல்லாரும் கார் இடித்தவுடன் இறப்பதில்லை. இந்த புகைப்படம் விபத்து நடந்து நான்கு ஆண்டுகளுக்கு பிறகு எடுத்தது..இன்னும் இவர் சிகிச்சை பெற்று கொண்டிருக்கிறார்... இவரின் உடல் 60௦% எரிந்து உள்ளது... .


Let's make as many people as we can aware of the consequences of drinking & driving.

குடிப்பழக்கம் உடலுக்கு கேடு ; நமது உடலுக்கு மட்டும் அல்ல ;அடுத்தவர் உடலுக்கும் தான்... 

Thursday, May 20, 2010

பார்வேர்ட் மெயில் - நாங்களும் ஆவோம்ல..!!!!

இதனால் சகலமான(ண)வர்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால்....நான் கல்வி அமைச்சரானால் தமிழகத்தில் சிறந்த கல்வியை அளிப்பேன் என்று உறுதி கூறுகிறேன்..

யாருல அது இம்புட்டு சத்தமா துப்புறது.... எதா இருந்தாலும் கீழ இருக்கறத படிச்சுட்டு..ஓகே..




நான் கல்வியமைச்சரானால்.....!!




+2
கேள்வித்தாள்கள் இப்படித்தானிருக்கும்! (வெளங்கிரும்!)

1. தமிழ்நாட்டின் ஆட்சிமொழி எது?

(அ) தமிழ் (ஆ) துளு (இ) பாரசீகம்

2. கீழே தரப்பட்டுள்ள இரண்டு கேள்விகளில் ஏதேனும் ஒன்றுக்கு பதில் அளிக்கவும்

2(அ).முதுமக்கள் தாழி எனப்படுவது யாது?

2(ஆ).அண்மையில் தனுஷ்-ஸ்ரேயா நடிப்பில் வெளியான,மூன்றெழுத்துத் திரைப்படம் எது?

(i) மெட்டி
(ii) சட்டி
(iii) பெட்டி
(iv) குட்டி

3.கவிப்பேரரசு வைரமுத்துவின் பணி எது?

(அ) புல் வெட்டுவது
(ஆ) பஞ்சர் ஒட்டுவது
(இ) ஊதுபத்தி விற்பது
(ஈ) கவிதை எழுதுவது

4. திருக்குறளில் அறத்துப்பால், பொருட்பால் தவிர மூன்றாவது பால் எது?

(அ) இன்பத்துப்பால்
(ஆ) மசாலா பால்
(இ) ஆவின் பால்

5. முக்காலிக்கு மொத்தம் எத்தனை கால்! (தோராயமாகச் சொல்லவும்)

6. கடியாரத்தில் பெரிய முள் 12-லும் சிறிய முள் 5-லும் இருந்தால் எத்தனை மணி? (4-க்கும் 6-க்கும் இடைப்பட்ட எண்)

7. ஆறுபடை வீடுகள் மொத்தம் எத்தனை?

8. தென்னகத்தின் வடபகுதியில் வசிப்பவர்களை எவ்வாறு அழைக்கிறோம்?

(அ) வட இந்தியர்கள்
(ஆ) பஜ்ஜி இந்தியர்கள்
(இ) போண்டா இந்தியர்கள்

9. எது பல்குத்த உதவும்?
(அ) துரும்பு (ஆ) கரும்பு (இ) இரும்பு

10. மதுரை மீனாட்சியம்மன் கோவில் எந்த நகரத்தில் அமைந்துள்ளது?
(அ) மன்னார்குடி (ஆ) மாமண்டூர் (இ) மதுரை

11. ஆர்க்கிமிடீஸ் கொள்கையைக் கண்டுபிடித்தவர் யார்?

12. உங்கள் சட்டையில் எத்தனை பொத்தான்கள் உள்ளன?

13. இந்தியாவின் தேசியப்பறவை எது?

(அ) மயில் (ஆ) காக்காய் (இ) இரண்டும் இல்லை

14. புவியீர்ப்பு சக்தி குறித்து எழுத முடியுமா?முடியாதா?

(அ) முடியும் (ஆ) முடியாது

15. பதினான்கு தளங்கள் கொண்ட எல்.ஐ.சி.கட்டிடத்தின் முதல் தளம் எந்தக் கட்டிடத்தில் இருக்கிறது?

16. ஆட்டுக்கால் சூப் என்றால் எந்த மிருகம் நினைவுக்கு வரும்?

(அ) கரடி (ஆ) காண்டாமிருகம் (இ) ஆடு

17. கல்லிடைக்குறிச்சி அப்பளம் தமிழகத்தின் எந்த ஊரில் தயாரிக்கப்படுகின்றது?

(அ) துவரங்குறிச்சி
(ஆ) ஆழ்வார்குறிச்சி
(இ) கல்லிடைக்குறிச்சி

18. உங்களுக்கு ஒருவர் மூன்று வாழைப்பழங்கள் கொடுத்தால், மொத்தம் உங்களிடம் எத்தனை வாழைப்பழங்கள் இருக்கும்?

19. BBC (Briish Broadcasting Corporation) என்பதன் விரிவாக்கம் என்ன?

20. உங்களது முழுப்பெயரை எழுதுக (எழுத்துப்பிழை தவிர்க்கவும்)

Error! Filename not specified.




2011 கொஸ்டின் பேப்பர் ரிலீஸ் ஆய்டுச்சுடோய்.....



எதா இருந்தாலும் பேசி தீத்துக்கலாம்...நோ பேட்வேர்ட் ஓகே....கும்மி ஸ்டார்ட்ஸ்...




Monday, May 10, 2010

பார்வேர்ட் மெயில் - அலைபேசி ஆபத்து


நான் பல முறை இவ்வாறு செய்திருக்கிறேன்... இனி இவ்வாறு செய்ய மாட்டேன்...நீங்களும் செய்ய மாட்டிர்கள் என்ற நம்பிக்கையுடன்....

cid:1.3446158225@web30608.mail.mud.yahoo.com

ஒரு சில நாட்களுக்கு முன்னர், ஒருவர் தன் அலைபேசியை வீட்டில் மின்சார இணைப்பில் வைத்திருந்தார்...(ரீசார்ஜ் இதன் தமிழாக்கம் என்ன ????)

அந்த நேரத்தில் அவரின் அலைபேசியில் அவருக்கு அழைப்பு வர,அவர் மின்சார இணைப்பில் இருந்த நிலையிலேயே அலைபேசியில் பேசியுள்ளார்....
cid:2.3446158225@web30608.mail.mud.yahoo.com

அந்த வினாடிகளில் அவரின் காதில் அலைபேசி வழியே மின்சாரம் பாய்ந்துள்ளது, உடனே வேகமாக அவர் அலைபேசியை தூர எறிந்துள்ளார்... அவர் தூக்கி போடும் போதே அது மின்சார இணைப்பின் காரணமாக வெடித்துள்ளது....

வெடி சத்தத்தை கேட்டு அவரின் பெற்றோர் அவரின் அறைக்கு வந்த போது அவர்கள் பார்த்தது...மயக்கமுற்ற நிலையில் மகனையும்,வெடித்து சிதறிய அலைபேசியையும்....



cid:3.3446158225@web30608.mail.mud.yahoo.com
மகனனின் விரல்கள் வெந்து போயும்..அவரின் இருதய துடிப்பு மோசமாக இருந்த நிலையில் அவரை மருத்துவமனைக்கு அவசரமாக எடுத்து சென்றனர்...


ஆனால், மருத்துவமைக்கு செல்லும் வழியிலேயே அவர் உயிர் பிரிந்துவிட்டது....


இந்த அறிவியல் கால உலகுக்கு அலைபேசி அவசியம் தான்....
cid:4.3446158225@web30608.mail.mud.yahoo.com
இதைபார்த்த பிறகாவது அலைபேசி மூலம் ஏற்படும் விபத்துகளை தவிர்ப்போம்...விழிப்புடன் இருப்போம்...

மின்சார இணைப்பின் போது அலைபேசியை பயன்படுத்தாதீர்கள்....
இணைப்பின் போது அழைப்பு வந்தால் மின்சார இணைப்பை துண்டித்த பின் அழைப்பை ஏற்கவும்....

தயவு செய்து இதை முடிந்தமட்டும் உங்கள் நண்பர்களுக்கு forward செய்யவும்..


Whether or not they have a cell phone. They can also inform others who do......


நன்றி

Surgical Services
cid:5.3446158225@web30608.mail.mud.yahoo.com
1400 NW 12th Ave.,
Miami, FL 33136

Thursday, April 29, 2010

பார்வேர்ட் மெயில் - நித்தியானந்தா


நித்யானந்தா ஆணா, பெண்ணா பரிசோதிக்க போலீசார் முடிவு
Front page news and headlines today 
பெங்களூரு : 'நடிகை ரஞ்சிதாவுடன் வீடியோவில் இருப்பது சாமியார் நித்யானந்தா தான்' என, ஐதராபாத்தில்உள்ள தடய அறிவியல் பரிசோதனை மையம் உறுதிபடுத்தியுள்ளது. 'நான் ஏதாவது தவறு செய்திருந்தால், என்னை தூக்கில் போடுங்கள்' என்று, நீதிமன்றத்தில் சாமியார் தெரிவித்துள்ளார். இதற்கிடையில், நித்யானந்தா ஆணா, பெண்ணா என்பதை கண்டறிய பரிசோதனை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். 
'நடிகை ரஞ்சிதாவுடன் இருப்பது நானல்ல. என், 'இமேஜை' பாழ்படுத்துவதற்காக கிராபிக்ஸ் செய்து வீடியோ காட்சி ஒளிபரப்பப்பட்டது' என்று சாமியார் கூறியிருந்தார். இதையடுத்து, ஐதராபாத்திலுள்ள தடயஅறிவியல் பரிசோதனை மையத்திற்கு நித்யானந்தா -நடிகை ரஞ்சிதா தொடர்பான வீடியோக்களை அனுப்பி பரிசோதனை செய்தனர். தற்போது, பரிசோதனை முடிவில், சம்பந்தப்பட்ட வீடியோவில் நடிகை ரஞ்சிதாவுடன் இருப்பது நித்யானந்தா தான் என்று தகவல் வெளியாகியுள்ளது. ரஞ்சிதாவிடம் விசாரணை நடத்தினால், பல தகவல்கள் வெளியாகும் என்று சி.ஐ.டி., போலீசார் கருதுதுகின்றனர். நடிகை ரஞ்சிதா மட்டுமின்றி, பல்வேறு பெண்களுடன் சாமியார் இருப்பது போன்ற, 'சிடி'க்களும் போலீசாரிடம் சிக்கியுள்ளன. இதையும் போலீசார் ஆராய்ந்து வருகின்றனர்.
நேற்று முன்தினம் ராம்நகர் நீதிமன்றத்தில் ஆஜரான நித்யானந்தா கூறுகையில், 'நான் ஏதாவது தவறு செய்திருந்ததாக நீதிமன்றம் கருதினால், என்னை தூக்கில் போடுங்கள்' என்று தெரிவித்துள்ளார். இதற்கிடையில், நித்யானந்தா ஆணா, பெண்ணா என்பதை கண்டறிய மருத்துவ பரிசோதனை செய்ய அனுமதிக்குமாறு ராம்நகர் நீதிமன்றத்தில், கர்நாடக சி.ஐ.டி., போலீசார் மனு தாக்கல் செய்யவுள்ளனர்.
கர்நாடக போலீஸ் பிடியில் ரஞ்சிதா? சாமியார் நித்யானந்தா வழக்கில் சிக்கியுள்ள நடிகை ரஞ்சிதாவிடம், கர்நாடக சி.ஐ.டி., போலீசார் நேற்று முன்தினம் இரவு துவக்கிய விசாரணையை நேற்றும் தொடர்ந்ததாக தகவல்கள் வெளியானது. ஆனால், 'ரஞ்சிதாவை அழைக்கவில்லை' என்று, கர்நாடக சி.ஐ.டி., டி.ஜி.பி. குரு பிரசாத் மறுத்துள்ளார். நித்யானந்தாவிடம் நடந்த விசாரணையின் போது, ரஞ்சிதா குறித்த தகவல்களை தெரிவித்து, அவருடைய போன் நம்பரையும் கர்நாடக போலீசாரிடம் கொடுத்துள்ளார். உடனடியாக சி.ஐ.டி., போலீசார் ரஞ்சிதாவை தொடர்பு கொண்டு, இரண்டு நாட்களுக்குள் பெங்களூரு வர வேண்டும், என்று கெடு விதித்தனர். அதற்கு ரஞ்சிதா, 'போலீஸ் விசாரணைக்கு ஒத்துழைக்கிறேன். விரைவில் பெங்களூரு வருகிறேன்' என்று கூறியிருந்ததாக, சி.ஐ.டி., போலீஸ் எஸ்.பி., யோகப்பா தெரிவித்திருந்தார். 
நித்யானந்தாவின் போலீஸ் காவல் இன்று முடிகிறது. அதற்குள், நடிகை ரஞ்சிதாவிடம் விசாரணையை முடித்து விட வேண்டும் என்று நடவடிக்கை எடுத்தனர். நேற்று முன்தினம் நள்ளிரவு, நடிகை ரஞ்சிதா பெங்களூரு வந்துள்ளதாகவும், அவரிடம், போலீசார் ரகசிய இடத்தில் விசாரணை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. ஆனால், இந்த தகவல்களை போலீஸ் தரப்பில் உறுதிபடுத்த வில்லை. நேற்று காலை, ரஞ்சிதாவிடம் விசாரணை நடந்து வருகிறது என்று கூறிய போலீசார், மாலையில் அந்த தகவலை மறுத்து விட்டனர்.
இரண்டாவது முறையாக நீடிக்கப்பட்ட நித்யானந்தாவின் போலீஸ் காவல், இன்றுடன் முடிகிறது. இன்று மாலை அவர், ராம்நகர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார். தன்னை ஜாமீனில் விடுதலை செய்யக் கோரி, கடந்த 23ம் தேதி ராம்நகர் நீதிமன்றத்தில், நித்யானந்தா மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு விசாரணை நேற்று நடந்தது. அப்போது அரசு தரப்பில், சாமியார் நித்யானந்தா மீதான விசாரணை இன்னமும் முடியவில்லை. எனவே, அவருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது, என்று வாதிடப்பட்டது. இதையடுத்து, ஜாமீன் மனு மீதான விசாரணை, மே 3ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. பிடதி ஆசிரமத்தில் சந்தன கட்டைகள் இருந்தது தொடர்பான வழக்கு விசாரணையும் இன்று ஒத்தி வைக்கப்பட்டது

Wednesday, April 21, 2010

பார்வேர்ட் மெயில் - நித்யானந்தா


நித்யானந்தா கைதாமே...???

இதோ சுட சுட செய்திகள்.....







நீதிமன்றம்... விசித்திரம் நிறைந்த பல வழக்குகளை சந்தித்திருக்கிறது.. புதுமையானபல வழக்குகளை சந்தித்து இருக்கிறது.. ஆனால், இந்த வழக்கு ஒன்றும்விசித்திரமானதல்ல... வழக்காட வந்திருக்கும் நானும் ஒன்றும் புதுமையானவன்அல்ல.. வாழ்கை பாதையிலே சர்வ சாதாரணமாக ஏமாற்றிப்பிழைக்கும்சாமியார்களில் நானும் ஒருவன்..
சாமி என்று கூறி ஊரை ஏமாற்றினேன்..
கதவைத்திற காற்று வரட்டும் என்றேன்..
நடிகைகளை எனது காலைப் பிடித்துவிடும்படி கூறினேன்..
குற்றம் சாட்டப்படிருகிறேன் இப்படியெல்லாம்..

ஆனால் நீங்கள் எதிர் பார்ப்பீர்கள்
நான் இதை எல்லாம் மறுக்கப்போகின்றேன் என்று...
இல்லை நிச்சியமாக இல்லை...

சாமி என்று கூறி ஊரை ஏமாற்றினேன்.. ஏன்??? மக்களை ஏமாற்றவேண்டும்என்பதற்காகவா? இல்லை.. மக்களிடம் காணப்படும் மூடநம்பிக்கை
வளரவேண்டும்என்பதற்காக..

கதவைத்திற காற்று வரட்டும் என்றேன்.. ஏன்..??காற்றுவரவேண்டுமென்பதற்காகவா? இல்லை.. அந்த நடிகை ஈசியாக ருமுக்குள்வரவேண்டும் என்பதற்காக...

நடிகைகளை எனது காலைப் பிடித்துவிடும்படி கூறினேன்.. ஏன்??? எனக்கு கால் வலிஎன்பதனாலேயா?....இல்லை அவள் நான் ஒரிஜினல் சாமியார் என்று என்மீதுவைத்திருக்கும்
அபரிமிதமான நம்பிக்கையை நீக்குவதற்காக....

உனக்கேன் இவ்வளவு அக்கறை??, உலகத்தில் யாருக்கும் இல்லாத அக்கறை என்றுநீங்கள் கேட்பீர்கள்..

நானே பாதிக்கப்பட்டேன், நேரடியாக நேரடியாகப் பாதிக்கப்பட்டேன்,
எனதுசுயநலதிலே பொது நலமும் கலந்து இருக்குறது,
என்னை குற்றவாளி என்கிறீர்களே,
என் வாழ்கை பாதையை சற்று திரும்பி பார்த்தீர்களானால்
நான் வாங்கிய அடிகள்எத்தனை,
மிதிகள் எத்தனை,
உதைகள் எத்தனை என்று கணக்கு பார்க்க இயலும்...

நான் பாடசாலைக்குக் கூடப் போனதில்லை ஆனால்
ஆன்மீகப்புத்தகம்படித்திருக்கிறேன்..
நான் நல்ல சன்னியாசியாக இருந்ததில்லை
ஆனால் ஊருக்கு உபதேசம்செய்திருக்கிறேன்..

கேளுங்கள் என் கதையை,
என்னை அடித்து துவைப்பதற்கு முன் தயவு செய்துகேளுங்கள்..
இந்தியாவிலே தமிழ்நாட்டிலே பிறந்தவன் நான்,
பிறக்க ஒரு ஊர் பிழைக்க ஒரு ஊர்,
போலிச்சாமியார்களின் தலைஎழுத்துக்கு
நான் மட்டும் என்ன விதி விலக்கா???
தமிழ்நாட்டில் இல் பிறந்த நான்,
ஜோசியம் பார்க்க ஜோதிடரிடம் ஓடோடி வந்தேன்,
ஜாதகம் என்னை நீயொரு மதபோதகம் என்றது...

என் பெயரோ நித்தியானந்தா, கேட்டாலெ உதைக்க தோன்றும் பெயர்.
ஆனால் என் போதனைக்கு அடிமையாகாத ஏமாளிகளே கிடையாது
நான் மட்டும் நினைத்து இருந்தால் சாமியாராக வராமல் இருந்திருக்கலாம், ஏதாவதுஒரு மட்டமான படத்தில் சாமியாராக நடித்திருக்கலாம்,
கஞ்சா பிசினஸ்,கழவெடுத்தல் என்று காலத்தை ஓட்டி இருக்கலாம்.
ஆனால் அதைதான் விரும்புகிறதா இந்த பரந்த உலகம்,
நடிகை மாட்டரில் படத்தைப் போட்டு எரித்தார்கள்.... ஓடினேன்...
மக்களின் காசில் கட்டிய மடத்தை சுக்குநூறாக உடைத்தான்.... ஓடினேன்
நேற்று வந்த சின்ன பொடியன்
என் ஜல்சா வீடியோவை யூ டியூப்பில் போட்டான்......ஓடினேன்
ஓடினேன் ஓடினேன்....
கேரளாவுக்கு ஓடினேன் கர்னாடகாவுக்கு ஓடினேன் பெங்களூருக்கும் ஓடினேன்



ஓடினேன் ஓடினேன்...... இந்தியாவின் அனைத்து ஊர்களுக்கும் ஓடினேன்...
எனது பக்தர்களின் கொலைவெறித்தாக்குதல்
தாங்காமல் திரும்பி வந்து விட்டேன்.

என் ஓட்டத்தை நிறுத்தி இருக்க வேண்டும்,
வீடியோவை யூ டியூப்பில் போக்கி இருக்கவேண்டும்,
என்னை தப்பியோட கதவைத்திறந்து விட்டிருக்க வேண்டும்
இன்று என்முன் சட்டத்தை நீட்டுவோர்.

செய்தார்களா? தப்பியோட விட்டார்களா இந்த நித்தியானந்தாவை,
என்னை சாமிஎன்று நம்பி ஏமாந்தது யார் குற்றம்??
எனது குற்றாமா? என்னை நம்பி ஏமாந்தமூடர்களின் குற்றமா?

நான் சொன்னதை நம்பி கதவைத்திறந்து வைத்தது யார் குற்றம்? கதவைத்திறகாற்றுவரட்டும் என்று சொன்ன எனது குற்றமா? கேனைத்தனமாக என் பேச்சைநம்பிக்கதவைத்திறந்த
மூடர்களின் குற்றமா?

எனது காலைப்பிடித்து விட்டது யார் குற்றம்?,
காலைப்பிடித்துவிடும்படி கூறியஎனது குற்றமா? இல்லை மாத்திரை தந்துவிட்டு
காலைப்பிடித்து விட்ட நடிகையின்குற்றமா??

இந்த குற்றங்கள் எல்லாம் களையப்படும் வரையில்,
என்னை போன்றநித்தியானந்தாக்கள், ஏமாற்றும்..........