என் அருகில் அமர இடம் கேட்ட உன்னிடம்
என் மனதிலும் அமரலாம் என்று சொல்ல ஆசைப்பட்டு
பின் அருகில் அமர அனுமதி கொடுத்தேன்...
அமைதியாய் அமர்ந்திருந்த உன்னிடம் பேசலாம் என்று
நினைக்கையில் வெறும் காற்றுதான் வந்தது...
உன்னை பார்த்து கொண்டிருக்க கண்கள் ஆசைபட்டாலும்
மனது ஏனோ வெட்கித் தலைகுனிய வைத்தது...
ஒரு முறை
நிமிர்ந்து நான் உன்னை பார்க்கவும்
நீ என்னை பார்க்கவும்
நம் கண்கள் சந்தித்த அந்த ஒரு நொடி
என் வாழ்வின் பலனை தந்ததடி.....
நீ செல்ல எழுந்து நின்று என்னை பார்த்து பின் சென்ற பொழுது..
நானும் உனக்கு அருகில் வர என் மனம் துடிக்க கால்கள் எழ...
சீ நாயே...ஒரு பொட்ட நாய பாத்தா போதுமே....
பேசாம உக்காரு...
என் எஜமானன் (கடன்காரன்) கழுத்துப்பட்டையை இறுக்கி இழுத்தான்...
லொள்..லொள்...
3 comments:
"லொள்"ளு ஜூப்பரு :))
நன்றி தல..
உங்கள விடவா லொள்ளு பண்றோம்..!!!! :-)
சூப்பரப்பு
அருமை அருமை
\\சீ நாயே...ஒரு பொட்ட நாய பாத்தா போதுமே....
பேசாம உக்காரு...
என் எஜமானன் (கடன்காரன்) கழுத்துப்பட்டையை இறுக்கி இழுத்தான்...\\
பக்கா வெட்டி பயபுல்ல தான்
Post a Comment